வாலிபாளையம் பகுதியில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திரு வீதி உலா

வாலிபாளையம் பகுதியில்  ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திரு வீதி உலா

பால் குடம் எடுத்து வந்த மக்கள்

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திரு வீதி உலாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

திருப்பூர் மாவட்டம், வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு நடை பெற்ற ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திரு வீதி உலாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

யுகாதி பண்டிகையை ஒட்டி திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோயிலில் இருக்கும் ஸ்ரீகன்னிமார சுவாமிகளுக்கும் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிகளுக்கும் ஆராதனைகள் மற்றும் திரு வீதி உலா நடை பெற்றது.இந்த திருவீதி உலாவையொட்டி அப்பகுதி சார்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாவிபாளையம் சமுதாயம் நலக்கூடத்தில் இருந்து சடையப்பன் கோவில் வரை பால் குடம், தீ சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.

மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story