இலங்கை அகதி கைது

இலங்கை அகதி கைது

பைல் படம்

வத்தலக்குண்டில் சட்ட விரோதமாக இந்திய அடையாள அட்டை பெற்ற இலங்கை அகதிப் பெண் கைது செய்யப்பட்டார்.

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் சட்ட விரோதமாக இந்திய அடையாள அட்டை பெற்ற இலங்கை அகதிப் பெண் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அகதி அமலநாயகி 50. வத்தலக்குண்டு அகதிகள் முகாமில் வசிக்காமல் காந்திநகரில் குடியிருந்து வந்தார். சட்டத்திற்கு விரோதமாக இந்தியர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக முகாம் துணை தாசில்தார் மனோகரன் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார்.விசாரித்த போலீசார் இந்திய அடையாள அட்டைகளான ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவையும் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.அமலநாயகி கைது செய்யப்பட்டார். அவருக்கு எப்படி கிடைத்தது என மேல் விசாரணை நடக்கிறது.

Tags

Next Story