பாலியல் பலாத்காரம் வழக்கில் இலங்கை தமிழருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் பலாத்காரம் வழக்கில் இலங்கை தமிழருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

பைல் படம்


பாலியல் பலாத்காரம் வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதத்தை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கடத்தி சென்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த இளைஞர் மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும்,அதே சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மொத்தமாக, இரண்டு வழக்குகளை சேர்த்து 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சமும்,மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) 25 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story