ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தீர்த்தவாரி

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தீர்த்தவாரி

திருக்கோவிலில் தீர்த்தவாரி


ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தீர்த்தவாரி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி கடை முழுக்கை முன்னிட்டு தீர்த்த வாரி வைபவம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி மீனாட்சி அம்மனுடன் சர்வ அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்கள்.

தொடர்ந்து நகர்வலம் வந்து மணிமுத்தாறு ஆற்றில் எழுந்தருளினார்கள். பின்னர் தீர்த்தவாரி வைபவம் துவங்கியது. சிவாச்சாரியார்கள் தெய்வங்களின் அஸ்திரா தேவர்களை எழுந்தருள செய்து பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி வைபவத்தை கண்டு வழிபாடு செய்தனர். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது

Tags

Next Story