எடப்பாடி அருகே நைனாம்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

எடப்பாடி அருகே நைனாம்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
பூ கரகம் 

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர், கோவிலின் திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பூச்சாட்டுதளுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு விசேஷ பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று சரபங்காற்றுக்குச் சென்று புனித நீராடிய பின்னர் பூ கரகம், ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது பூக்கரகத்துடன் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டும் கையில் சேத்து முட்டி ஏந்திக்கொண்டும் மேளதாளங்களோடு ஊர்வலமாக ஆடி வந்தனர். கோவிலை வந்தடைந்த பின்னர் கோவில் முன்பு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அங்கப் பிரதட்சணம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மன், மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகரை, வழிபட்டுச் சென்றனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு தட்டம் எடுத்து வந்து ஸ்ரீ முத்துமாரியம்மன்க்கு கிடாவெட்டி நேத்திக்கடன் செலுத்தினர்.

Tags

Next Story