ஸ்ரீ நரசிங்க பெருமாள் புஷ்ப பல்லாக்கில் தெரு வீதி உலா

ஸ்ரீ நரசிங்க பெருமாள் புஷ்ப பல்லாக்கில் தெரு வீதி உலா

வீதி உலா 

திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் புஷ்ப பல்லாக்கில் தெரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மி சமேத நரசிம்ம சுவாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சவம் ஐந்தாம் நாள் திருதியை திதி கேட்டை நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கருடாழ்வார் மேல் புஷ்ப பல்லாக்கில் ஸ்ரீ நரசிங்க பெருமாள் தெரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story