கொளுத்தும் வெயிலில் கணவருக்காக வாக்கு சேகரித்த மனைவி

கொளுத்தும் வெயிலில் கணவருக்காக வாக்கு சேகரித்த மனைவி

ஸ்ரீநிதி பிரசாரம் 

திருபுவனத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திசிதம்பரத்தை ஆதரித்து, பரதநாட்டிய கலைஞரும் அவரது மனைவியுமான ஸ்ரீநிதி திருப்புவனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசித்தி பெற்ற மடப்புரம் காளி கோயில் மற்றும் மணி மந்திர விநாயகர் கோயில் ஆகியவற்றில் சாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். திருப்புவனம் தினசரி மார்கெட், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளையும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களையும் எடுத்து கூறி, தமிழகத்தில் திமுக ஆட்சியின் சாதனைகள் தொடர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தனது கணவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

பிரச்சாரத்தின் கடைசி நாள் என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது கணவருக்கு வாக்குகள் சேகரித்தார். அவருடன் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story