ஸ்ரீபெரும்புதுார் : குட்கா விற்ற கடைக்கு சீல்

ஸ்ரீபெரும்புதுார் : குட்கா விற்ற கடைக்கு சீல்

கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஸ்ரீபெரும்புதுார், அகமது மொய்தீன் தெருவைச் சேர்ந்த குமரேசன், 36, என்பவரின் கடையில், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கடைக்கு சீல் வைத்தனர்.

Tags

Next Story