குப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக புகார்

குப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக புகார்

குப்பை அள்ளுவதில் அலட்சியம்

மழைநீர் கால்வாயில் குப்பை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் வெங்காடு ஊராட்சி, வினாயகர் கோவில் தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, குப்பை அள்ளும் போது தொட்டியை முறையாக கையாள்வதில்லை, குப்பை தொட்டியில் இருந்து குப்பையை அகற்றி பின், தொட்டியை கால்வாயில் தலைக்குப்புற கவிழ்த்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் குப்பை தெருக்கள் மற்றும் மழைநீர் கால்வாயில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த இடத்தில் குப்பை தொட்டியை முறையாக பராமரித்து, குப்பை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story