ஸ்ரீரங்கம்: கிரீடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாளான இன்று நீண்ட நேர் கிரீடம் அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள் மூன்றாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் 'சென்னியோங்கு' பாசுரத்திற்கு ஏற்ப ,கல் இழைத்த நீண்ட நேர் கிரீடம் அணிந்து ; வைரக் கல் அபய ஹஸ்தம் ; மகர கர்ண பத்திரம்; 'நாச்சியார் திருமொழி'க்கு ஏற்ப தாயார் பதக்கம் ; சிகப்புக்கல் தாமரை பதக்கம்; வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை; சந்திரகலை , காசு மாலை, இரட்டை வட முத்துமாலை; அடுக்கு பதக்கங்கள் அணிந்து ; சிகப்பு கல் திருவடி சாற்றி; பின் சேவையாக - புஜ கீர்த்தி; பருத்தி பூ பதக்கம் அணிந்து; பச்சை பட்டு உடுத்தி சேவை சாத்திக்கிறார்

Tags

Next Story