அரசு பேருந்து மோதியதில் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ பலி

அரசு பேருந்து மோதியதில் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ  பலி

எஸ்.எஸ்.ஐ முருகன் 

திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது அரசு பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்தவர் முருகன் (52). இவருக்கு சத்யா ( 47) என்ற மனைவியும் மற்றும் அமிர்தவல்லி ( 22) என்ற மகளும் ஹரிஷ் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் திருப்பரங்குன்றம் காவல் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே முருகன் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 7:40 மணியளவில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மதுரை தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story