பிளஸ்-2 தேர்வில் எஸ்.எஸ்.ஆர்.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
சேலம் கருப்பூர் கரும்பாலை எஸ்.எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் சில மாணவர்கள் அதிக மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
சேலம் கருப்பூர் கரும்பாலை எஸ்.எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் சில மாணவர்கள் அதிக மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
சேலம் கருப்பூர் கரும்பாலை எஸ்.எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 ேதர்வில் மாணவி திவ்யதர்ஷினி 600-க்கு 582 மதிப்பெண்களும், மாணவி ஷாபாத்திமா 581 மதிப்பெண்களும், மாணவி சரண்யா 575 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை மாணவ- மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேல், பொருளாளர் பன்னீர்செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் குமார் மற்றும் இயக்குனர்கள் மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்பு மற்றும் புத்தகம் வழங்கி பாராட்டினர்.
Next Story