கூலித் தொழிலாளிக்கு கத்தி குத்து

கூலித் தொழிலாளிக்கு கத்தி குத்து
பைல் படம்
இரணியல் அருகே கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திதாகக்கூறி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் அருகே திருவிடைக்கோடு கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (33) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவ தினம் அதே பகுதியை சேர்ந்த விமல், மணிகண்டன் ஆகியோர் கண்ணனின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் கண்ணன் எங்கே என்று கேட்டு அவதூறாக பேசியுள்ளனர். மேலும் தயாரிடம் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இது குறித்து கண்ணனிடம் அவரது தாயார் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து விமல், மணிகண்டன் ஆகியோரிடம் கண்ணன் சென்று விசாரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ரெண்டு பேரும் கண்ணனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.

மேலும் விமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் தப்பித்து ஓடிய போது, அவரை துரத்தி 2 பேரும் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். படுகாயமடைந்த கண்ணன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விமல், மணிகண்டனை இரண்டு தேடி வருகின்றனர்.

Tags

Next Story