விவசாய நிலத்தில் மூட்டை மூட்டையாய் காலாவதியான மாத்திரைகள்

போச்சம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் மூட்டை மூட்டையாய் காலாவதியான மாத்திரைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டிச் சென்றனர்.
போச்சம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் மூட்டை மூட்டையாய் காலாவதியான மாத்திரைகள் - அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டிச்சென்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆவலக்கம்பட்டி கிராமத்தில் சின்னசாமி (43) மற்றும் முனியப்பன் (50) ஆகிய இருவரது விவசாய நிலத்தில் மூட்டை மூட்டையாக காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்கள் அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். சின்னசாமி என்பவரது மாந்தோட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றிற்கு பாதுகாப்பாக கட்டில் போட்டு அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் மாந்தோட்டத்தின் ஓரத்தல் மூட்டை மூட்டையாக காலாவதியான மாத்திரைக்கள் மற்றும் மருந்து பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். அதேபோல் இவரது பக்கத்து விவசாயி முனியப்பன் நிலத்திலும் கொட்டிச்சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையின் காலாவதியான மருந்துகளை கொட்டி சென்றுள்ளதாக விவசாயி தெரிவித்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி தலைமை மருத்துவர் நாராயணசாமி அவர்களிடம் கேட்டபோது, நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story