தேர்தல் பணி குறித்தான ஊழியர் கூட்டம்

பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பணி குறித்த ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு பகுதியில் கவுண்டனூர், சாமானூர், இந்திராநகர், பல்லக்காபாளையம், அல்லிநாயக்கன்பாளையம், ஆகிய கிளைகளை உள்ளடக்கிய தேர்தல் ஊழியர் கூட்டம் படைவீடு ICL கட்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர். S. வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒன்றிய குழு செயலாளர் தோழர் எஸ்.சந்திரமதி , ஒன்றிய குழு உறுப்பினர் மு.மணிகண்டன் மற்றும் பகுதியில் உள்ள முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாசிச பாஜக அரசை ஆட்சி கட்டிலில் இருந்து கீழே இறக்கிட , ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது அதற்கு , வாக்குகள் கேட்டு பகுதி வாரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கூட்டணி கட்சிகளை உடன் இணைத்து கொண்டு,வாக்கு சேகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது

Tags

Next Story