கைப்பிடி சுவர் இல்லாத படிக்கட்டு - பெண் தொழிலாளி படுகாயம்

கைப்பிடி சுவர் இல்லாத படிக்கட்டு  - பெண் தொழிலாளி படுகாயம்

பைல் படம் 

குடவாசல் அருகே கைப்பிடி சுவர் இல்லாத படிக்கட்டில் மணல் சுமந்து சென்ற பெண் தொழிலாளி தவறி விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அடவங்குடி கிராமத்தில் உள்ள புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றி வரும் தினேஷ் என்பவர் ராசவல்லி என்பவரை இரண்டு மாடி கட்டிடத்தில் கைப்பிடி சுவர் இல்லாத படிக்கட்டின் வழியாக மணல் சுமந்து செல்ல கூறியுள்ளார். படிக்கட்டில் சென்றபோது கீழே தவறி விழுந்த ராசவல்லி பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ராசவல்லியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .இந்த சம்பவம் குறித்து தினேஷ் என்பவரை குடவாசல் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story