சிவகாசி அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம்

சிவகாசி அருகே  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
சிவகாசி அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம்....
சிவகாசியில் நடைபெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் மாநகர திமுக சார்பில்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்,நடிகர் போஸ்வெங்கட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.ஒன்றிய மோடி அரசு தமிழகத்திற்கு உரிய திட்டங்களையும், திட்டங்களுக்கான நிதியையும் சரியாக வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் அரசு நிச்சயம் வெற்றி பெறும்.தளபதி ஸ்டாலின் தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறுமென்று போஸ்வெங்கட் பேசினார்.

பொதுக்கூட்டத்தில்,சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் வனராஜா, திருத்தங்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் பொன்சக்திவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story