இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்

குமாரபாளையம் வடக்கு நகர திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


குமாரபாளையம் வடக்கு நகர திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வடக்கு நகர திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர். மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி குமாரபாளையம் வடக்கு நகர திமுக சார்பில் 3வது வார்டு மற்றும் 4வது வார்டில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் . எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எனவும் கழக அரசின் சாதனைகளை இல்லம் தோறும் பிரச்சாரமாக செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் துண்டு பிரசுரங்களை அப்பகுதி மக்களிடையே வழங்கி கழக அரசின் சாதனைகளையும் நகர மன்ற தலைவராக நகரத்துக்கு செய்த சாதனைகளையும் விளக்கி எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், ராஜ்குமார், ,அண்ணமார் கந்தசாமி, பன்னீர்செல்வம் மற்றும் 3வது வார்டு செயலாளர் கோவிந்தராஜ், 4வது வார்டு செயலாளர் சீனிவாசன்,நகர மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், புஷ்பா மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மகளிர் அணி ஜோதி, நதியா மற்றும் 3வது வார்டு, 4வது வார்டு கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story