நாமகிரிப்பேட்டையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆனைக்கிணங்க, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி அறிவறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூர் கழகத்தின் வார்டு எண் :15ல் மாவட்ட பார்வையாளர் ஐ. கணபதி அவர்கள் தலைமையில் பேரூர் கழக செயலாளர் அன்பழகன் முன்னிலையில் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் பாலு,வார்டு செயலாளர் பாபு, கவன்சிலர் கணகவள்ளி, இரத்தின சபாபதி, கிருஷ்ணன், முபாக், சரவணன், தமிழ், அன்பு, கணேசன், லியாத் அலி,ஜீவா, பாபு,அப்பகுதி கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறினர். தொடர்ந்து இதேபோல் பல்வேறு இடங்களில் திண்ணை பிரச்சாரம் செய்தனர்.

Tags

Next Story