புளியங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்

புளியங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்
பிரச்சாரம் 
வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் திமுகவினர் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகர திமுக சார்பாக நேற்று 11வது வார்டில் "இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்" என்ற திமுக அரசின் சாதனைகளை விளக்கும் திண்ணை பிரச்சாரமனது திமுக நகர செயலாளர் அந்தோணிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாவட்ட கலை இலக்கிய அணி மீனாட்சி சுந்தரம் மற்றும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story