சேலத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை பரிசளிப்பு

சேலத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை பரிசளிப்பு

கூடை பந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளார் 

சேலத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பரிசு வழங்குகிறார்.

சேலம் மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கு மாநில அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடக்கிறது.ஆண்கள் பிரிவில் 16 அணிவீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணி வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.நேற்று 2-ம் நாள் கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெறுபவர்கள் இன்று (சனிக்கிழமை) அரை இறுதி போட்டியில் விளையாட உள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அன்று இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது.

இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.

Tags

Next Story