மாநில காங்., செய்தி தொடர்பாளராக நாமக்கல் டாக்டர் நியமனம்

மாநில காங்., செய்தி தொடர்பாளராக நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை கட்சிக்குள் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார். குறிப்பாக வளரும் இளம் தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய பொறுப்புக்களை அளித்து அவர்களை ஆர்வமுடன் கட்சிப் பணிகளில் பங்கேற்கச் செய்கிறார்.அதன் ஒரு பகுதியாக தற்போது செய்தி தொடர்பாளராக கொங்கு மண்டலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் P.V.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற துணைத் தலைவர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவர் என கட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், முதல் பாராளுமன்ற உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த கர்மயோகி டி.எம். காளியண்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story