மாநில கபடி போட்டி: துாத்துக்குடி முதலிடம்

மாநில அளவிலான கபடி போட்டியில் துாத்துக்குடி அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் வெற்றிவேல் கபடி குழு மற்றும் ஊர்மக்கள் சார்பில் 76வது ஆண்டாக மின்னொளி கபடிப்போட்டி நடந்தது. துாத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 54 அணிகள் பங் கேற்றன. முதல் பரிசை துாத்துக்குடி செல்லமுத்து நினைவு அணியும், 2ம் பரிசை கொன்னையம்பட்டி வெற்றிவேல் அணி, 3ம் பரிசை கரூர் செவன்ஸ் ஸ்டார் அணியினர் பெற்றனர். வெற்றிப்பெற்ற அணியினருக்கு கொன்னையம்பட்டி ஊராட்சித் தலைவர் மாரிக்கண்ணு, பிச்சன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், கூட்டுறவு வங்கி செயலாளர் செல்வம், சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். வெற்றிக் கோப்பைகளை சிங்கப்பூர் வாழ்நண்பர்கள், வெற்றிவேல் கபடிக்குழு சதீஷ்குமார்,பழ னிச்சாமி, சிவா, ரங்கராஜன், ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story