தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

மாற்றுதிறனாளி வீரர்கள்

தூத்துக்குடியில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற  வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களுடன் இன்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ், செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, ஈசி மெம்பர் அஜிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story