மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நாமக்கல் பள்ளி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நாமக்கல் பாரதி பள்ளி மாணவிகள் சாதனை! மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை மற்றும் வாள் சண்டைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் நாமக்கல் மாவட்டம் சார்பாக ரெட்டிப்பட்டி, பாரதி கல்வி நிறுவனங்களின் மாணவிகள் பங்கேற்றனர். குத்துச்சண்டைப் போட்டியில் பாரதி பள்ளி 7ம் வகுப்பு மாணவி யக்ஷனா தங்கப்பதக்கம் பெற்றார். இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி சுதர்ஷனா வெண்கலப்பதக்கம் வென்றார். வாள் சண்டை போட்டியில் பாரதி பள்ளி 6ம் வகுப்பு மாணவி கவியாழினி வெண்கலப்பதக்கம் வென்று, நாமக்கல் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராமசாமி, பள்ளி செயலாளர் சாரதாமணி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் வினோதினி, சதிஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story