சங்ககிரி அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

சங்ககிரி அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர்கள்

சங்ககிரி அருகே அரசிராமணி பகுதியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி, செட்டிப்பட்டி எஆர்சி நண்பர்கள் குழுவின் சார்பில் 8ம் ஆண்டாக மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியினை அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பேட்டிங் செய்து தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

இதில் சங்ககிரி, அரசிராமணி, பூலாம்பட்டி, பவானி, மயிலம்பாடி, கொங்கணாபுரம், எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதற்பரிசாக ரூ.20 ஆயிரத்தை அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், 2வது பரிசு ரூ.16 ஆயிரத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜனும், 3வது பரிசு ரூ.12 ஆயிரத்தை அதிமுக சங்ககிரி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா, 4வது பரிசாக ரூ.8001 அதிமுக அரசிராமணி பேரூராட்சி செயலாளர் காளிப்பனும், 5வது பரிசு ரூ.4001 அரசிராமணி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் செல்விதங்கவேல் ஆகியோர் வழங்க உள்ளனர்.

Tags

Next Story