மாநில அளவிலான கபடி போட்டி

மாரண்ட அள்ளி அருகே தொட்டபாவளியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்ட அள்ளி அருகே தொட்டபாவளியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் , தொடங்கி வைத்து, கபடி விளையாட்டினை பார்வையிட்டார்.

இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 75 ஆயிரம், 2ம் பரிசாக 50 ஆயிரம், 3ம், 4ம் பரிசாக 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் முருகன், மாநில கபடி குழு துணை தலைவர் தொழிலதிபர் பாஸ்கர், மாவட்ட கபடி குழு செயலாளர் கருணாகரன், பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story