திருச்சியில் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் - ஆட்சியர் தகவல்.

திருச்சியில் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் -  ஆட்சியர் தகவல்.

ஆட்சியர் அலுவலகம் 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாநகரங்களில் 26 விளையாட்டுகளுக்கு (19.01.2024) முதல் (31.01.2024) வரை நடைபெறவுள்ளது. இதன் தொடர்பாக, கையுந்து பந்து மற்றும் கோ-கோ ஆகிய குழு விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அணியும் இடம்பெறவுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் அவர்களது சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் (12.12.2023) மற்றும் (13.12.2023) ஆகிய 2 நாட்களில் கையுந்துபந்து மற்றும் கோ-கோ விளையாட்டுகளுக்கு அண்ணா விளையாட்டரங்கில் காலை 7:00 மணியளவில் நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள 18 வயதிற்குட்பட்ட (01.01.2005)-க்கு பிறகு பிறந்த வீரர்கள் / வீராங்கனைகள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story