குளச்சலில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் .

குளச்சலில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் .
சிலம்ப போட்டியை துவக்கி வைத்த எம் எல் ஏ - க்கள்
கன்னியாகுமரி மாவட்ட குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி குளச்சல் வி கே பி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. எம் எல் எ - க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் போட்டியை துவக்கி வைத்தனர். மகளிருக்கான போட்டிகளை கிராம நிர்வாக அலுவலர் குமாரி சிந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், நகர திமுக செயலாளர் நாகூர் கான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் நெல்லை தூத்துக்குடி மற்றும் குமரி - கேரளா மாநில எல்லை பகுதியான பாறசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ டி எஸ் பி சங்கர், சிலம்பக்கலை மணி டாக்டர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியை குமரி களரி கலைக்களஞ்சியம் பாபு உசேன் ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story