மாநில தலைவர் நியமனம் - காங்கிரசார் கொண்டாட்டம்

மாநில தலைவர் நியமனம் - காங்கிரசார் கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு இனிப்பு விநியோகம் 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வபெருந்தகை நியமனம் செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை அக்கட்சியின் தலைமை நியமனம் செய்துள்ளது. இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, வர்த்தக பிரிவு மாநகர தலைவர் சுப்பிரமணியம், விவசாய பிரிவு நிர்வாகி சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து முள்ளுவாடி கேட் வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story