விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை அறிக்கை

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  தாரகை அறிக்கை

இந்திய கூட்டணிக்கு வாக்களித்தால் தொகுதியில் இருந்து பணியாற்றுவேன் என விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்திய கூட்டணிக்கு வாக்களித்தால் தொகுதியில் இருந்து பணியாற்றுவேன் என விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாள ராகபோட்டியிடும் தாரகை கூறியிருப்பதாவது. எனக்கு தொகுதி முழுவதும் மக்கள் நல்ல வரவேற்பை தந்து வருகின்றனர். இதன் மூலம் வெற்றி உறுதியாகி விட்டது. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மக்களை அவர்கள் இல்லத்திற்கேசென்று வாக்கு சேகரித்து வருகிறேன்.வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள், பெண் கள் என அனைத்து தரப்பு மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள், அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளனர். இவற்றை சட்டமன்றத்தில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுப்பேன்.விளவங்கோடு தொகுதியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவேன். மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர், மின்சா ரம் போன்ற வசதிகளை நடவடிக்கை கை எடு துடன் அவர்களின் அடிப்படை வசதி கள் மேம்பட சட்ட மன்றத்தில் குரல் கொடுப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story