அரிமா சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைளுக்கு எழுது பொருட்கள்

அரிமா சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைளுக்கு எழுது பொருட்கள்

பசுபதிகோவில் அரிமா சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.


பசுபதிகோவில் அரிமா சங்கம் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
பாபநாசம் அருகே பசுபதி கோவில் அங்கன்வாடி குழந்தை களுக்கு அய்யம்பேட்டை டவுன் அரிமா சங்கம் சார்பில் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்டாரத் தலைவர் தமிழ்செல்வன் 63- ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பிரதிநிதி ராம. பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.சுப்பராமன் முன்னிலை வகித்தார். மலர் கொடி வரவேற்றார். விழாவில் குழந்தைகளுக்கு எழுது பொருட்களும், பிஸ்கட், இனிப்பு வகைகளும், அங்கன்வாடிக்கு மின்விசிறியும் வழங்கப்பட்டது. மேலும் பசுபதிகோவில் பள்ளிவாசலுக்கு ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. இதில் செழியன், பழனி, ஜார்ஜ், மகா அழகேஷ், பிரவீன் பிரபு, சூரிய கரன், செவிலியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். வினோத் நன்றி கூறினார்

Tags

Next Story