பங்கு சந்தையில் நஷ்டம்: தனியார் நிறுவன அலுவலர் தற்கொலை

பங்கு சந்தையில் நஷ்டம்: தனியார் நிறுவன அலுவலர் தற்கொலை

பைல் படம்

தூத்துக்குடியில் பங்குச் சந்தையில் நிதியை இழந்தால் தனியாா் நிறுவன அலுவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சோ்ந்த சங்கர நாராயணன் மகன் சதீஷ்குமாா் (26). இவா் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆபிசராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனா். இந்நிலையில், சதீஷ்குமாா் பங்கு சந்தையில் ரூ.5லட்சம் முதலீடு செய்திருந்தாராம். அதில் அவருக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாம். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story