கற்கள் கடத்திய லாரி பறிமுதல் - ஓட்டுநர் தப்பி ஓட்டம்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல் - ஓட்டுநர் தப்பி ஓட்டம்

காவல் நிலையம் 

பாலக்கோடு அருகே வாகன சோதனையின் போது அனுமதியின்றி கடத்திக் கொண்டுவரப்பட்ட கருங்கற்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் இதன் நிலையில் நேற்று மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் மேல்நிலை வருவாய் ஆய்வாளர் அருணகிரி மற்றும் அதிகாரிகள், பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை கண்டதும், டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, லாரியில் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கருங்கற்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், பாலக்கோடு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story