கர்நாடக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு

கர்நாடக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு

பேருந்து மீது கல்வீச்சு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே குடிபோதையில் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்ற 3 கர்நாடக அரசு பேருந்துகள் மீது மர்மநபர்கள் கற்கள் வீசி தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே எச்சூர் தரைபாலத்தில் நள்ளிரவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்ற 3 கர்நாடக அரசு பேருந்துகள் மீது குடிபோதையில் இருந்த மர்ம நபர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது டிரைவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய 3 மர்ம நபர்கள் குறித்து அனக்காவூர் போலீசில் புகார் செய்ததின் பேரில் அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story