வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; 6 சிறுவர்கள் சிக்கினர்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; 6 சிறுவர்கள் சிக்கினர்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வழக்கில் நாரைக்கிணறு போலீசார், 6 சிறுவர்களை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வழக்கில் நாரைக்கிணறு போலீசார், 6 சிறுவர்களை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 4-ந் தேதி மதியம் சென்னையில் இருந்து புறப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் இரவு 10 மணி அளவில் நெல்லை அருகே உள்ள மணியாச்சியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த மர்மநபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ரயிலில் 6 பெட்டிகளில் இருந்த கண்ணாடி சேதம் அடைந்தன.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ரயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நெல்லை அருகே உள்ள நாரைக்கிணறுக்கும், கங்கைகொண்டானுக்கும் இடைப்பட்ட பகுதியில் மர்மநபர்கள் ரயில் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ‘வந்ேத பாரத்’ ரயில் மீது கல்வீசியது 6 சிறுவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாரைக்கிணறு போலீசார், அந்த 6 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ரயில் மீது கற்களை வீசியதற்கான காரணம் குறித்து சிறுவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story