கல்குவாரி வெடி விபத்து - இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு : எஸ்பி தகவல்

கல்குவாரி வெடி விபத்து - இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு : எஸ்பி தகவல்

எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து சம்பந்தமாக இரண்டு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக விருதுநகர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டியில், ஆவியூர் வெடி விபத்து சம்பந்தமாக முதற்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குவாரி உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் . சேது என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வெடிப்பொருட்கள் வைத்திருந்ததாகவும் எரிபொருள் சப்ளை பண்ணும் டீலராக இவர் பணிபுரிந்து வருவதாகவும் 500 கிலோ வரை மட்டுமே வெடி பொருட்கள் வைத்திருக்க அனுமதி பெற்று இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎஸ்பி தலைமையில் இதே கல்குவாரியில் சோதனை நடத்திய பொழுது முறையான ஆவணங்கள் இருந்ததாகவும் சேது ஆகிய இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story