புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்

சட்டவிரோதமாக புகையிலை உற்பத்தி விற்பனை செய்த கடைக்கு சீல

சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்

திண்டுக்கல்லில் புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகள் மீது கடந்த சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையிலுள்ள ஒரு கடையில் புகையிலை விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தக் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம், 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தாா். மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags

Next Story