குளச்சலில் சூறைக்காற்று

குளச்சலில் சூறைக்காற்று
சாலையில் சாய்ந்த தென்னை மரம்
குளச்சலில் வீசிய சூறைக்காற்று தென்னை மரம் ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கருங்கல் சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் குளச்சல் பகுதியில் பரத் சூறைக்காற்று வீசியது இதில் சைமன் காலனி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் நின்ற தென்னை மரம் திடீரென முறிந்து விழுந்தது. இந்த மரம் சாலையின் மறுபுறம் நின்ற மின்கம்பத்தில் விழுந்தது. உடனே மின்தடை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசப்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு துறையினர் அலுவலர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டியாகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து சீரானது.

Tags

Next Story