புயல் மழை எதிரொலி... சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

புயல் மழை எதிரொலி... சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

புயல் மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

புயல் மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நிலவி வரும் புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டிசம்பர் 4 அன்று புறப்பட வேண்டியது நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634), மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (22662), தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16752), மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651), திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606), குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

Tags

Next Story