பத்தாம் வகுப்பு மாணவிக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து

பத்தாம் வகுப்பு மாணவிக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து

பத்தாம் வகுப்பு மாணவிக்கு வாழ்த்து

சுத்தமல்லி கேஎம்ஏ நகர் பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண் பெற்ற மாணவியை எஸ்டிபிஐ கட்சியினர் பாராட்டினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் சுத்தமல்லி கேஎம்ஏ நகர் பகுதியை சேர்ந்த மாணவி பரக்கத் நிஷா ஆரைகுளம் டைம் மெட்ரிக் பள்ளியில் பயின்று 471 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவியை இன்று (மே 11) காலை எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story