ஆத்தூர் அருகே ஓடை தூர்வாரும் பணி துவக்கம்

ஆத்தூர் அருகே ஓடை தூர்வாரும் பணி துவக்கம்

தூர்வாரும் பணி துவக்கம்

ஆத்தூர் அருகே கீரிப்பட்டி, சீலலியம்பட்டி, ஈச்சம்பட்டி ஊராட்சியின் வழியே செல்லும் சிற்றாறு ஓடையை தமிழ்நாடு அரசின் பொதுப்பணி- நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் தூர்வாரும் பணி தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரிப்பட்டி, சீலலியம்பட்டி, ஈச்சம்பட்டி ஊராட்சியின் வழியே செல்லும் சிற்றாறு ஓடையை தமிழ்நாடு அரசின் பொதுப்பணி- நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியிணை ஆத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் செழியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் மாணிக்கம் உதவியாளர் மணிஆத்தூர் ஒன்றிய திமு கழக பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, சீலியம்பட்டிபழனி, கிளைக் கழக செயலாளர்கள் சுரேஷ் ,சண்முகம் அ.லியோ சென்ன கிருஷ்ணன், சக்திவேல், முல்லை முருகேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story