செய்யாறு அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

செய்யாறு அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு பகுதியில் நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, கொடநகர் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் இளையராஜா வரவேற்றார்.

அதிமுக தலைமை கழக பேச்சாளர் அதிரடி அரங்கநாதன் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என உரையாற்றினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அவை தலைவர் ஜனார்த்தனன் அருணகிரி, மெய்யப்பன் தணிகாசலம் சுரேஷ் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story