அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருப்பூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின் ஆட்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டது திருப்பூர் மக்கள் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி. ஜெயராமன் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேச்சு. திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பகுதி செயலாளர் VPN. குமார் மற்றும் கண்ணப்பன் ஏற்பாட்டில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் MLA தலைமையில் ராக்கியாபாளையம் மற்றும் சிடிசி கார்னர் பகுதிகளில் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி வரும்பொழுது எல்லாம் தமிழகத்தில் அதிக பாதிக்கக்கூடிய மக்கள் திருப்பூர் மக்கள் ஆவார், பொதுமக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர் வீட்டு வாடகை, கரண்ட் பில் கட்ட முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர், அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகமாகியுள்ளது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அதேபோன்று நிறுவனங்களில் அதிமுக ஆட்சி காலத்தில் வட்டியில்லா கடன் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை காத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தற்பொழுது நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது, மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சி காலத்தில் பொதுமக்கள் சந்தோஷமாக இருந்ததாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும், எடப்பாடி யார் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story