கீழ்பெரும்பாக்கத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

கீழ்பெரும்பாக்கத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
கீழ்பெரும்பாக்கத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கீழ்பெரும்பாக்கத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு நகர அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெற்றது, இதற்கு நகர செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர இணை செயலாளர் விஜய், வார்டு செய லாளர்கள் ஜெகன்பாண்டியன், அபிராமன், சம்சுதீன்சேட், இளங்கோ, ரவிசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் சசிரேகா சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு பேசினார், இதில் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர செய லாளர் ஜானகிராமன், நகர பேரவை செயலாளர் வரதன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி பாஸ்கரன், பாசறை பொறுப்பா ளர் ஹரிகிருஷ்ணன், மகளிரணி நிர்வாகி பத்மப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி நன்றி கூறினார்.

Tags

Next Story