மேட்டூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மேட்டூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

சேலம் மாவட்டம்,மேட்டூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.


சேலம் மாவட்டம்,மேட்டூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அருகே சாம்பள்ளி, கோனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் (அதிமுக) தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமை கழகப் பேச்சாளர் தீக் கனல் லட்சுமணன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறியும் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ,மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம்,அம்மா பேரவை செயலாளர்கள் ராஜா,ராஜரத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story