பாமக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் !

பாமக சார்பில்  தெருமுனை பிரச்சாரக் கூட்டம் !
பாமக 
செங்கல்பட்டு மாவட்டம் பாமக சார்பில் கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச் செயலாளர் ஹரி தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மழைமலை நகர் அருகே கீழக்கரணை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நகரச் செயலாளர் ஹரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நகர இளைஞரணி செயலாளர் பார்த்திபன் வரவேற்பு உரையாற்றினார். கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மாநில வன்னியர் சங்க செயலாளருமான திருக்கச்சொல்லி ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் நகர மன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், பாண்டியன், திருக்கச்சூர் ஏழுமலை உள்ளிட்டோர் பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story