மேல்மலையனூர் ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மேல்மலையனூர் ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மேல்மலையனூர் ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது
மேல்மலையனூர் ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வளத்தி, கெங்கபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, அவை தலைவர் பூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி சங்கர் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் அமுதா கலந்து கொண்டு பேசினார்,

இதில் ஒன்றிய கவுன்சிலர் முரளி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சத்தியராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் சுகன்ராஜ், லோகநாதன், நிர்வாகிகள் துரை காசிநா தன், துரைக்கண்ணு அண்ணாமலை, முருகன், வளர்மதி, காசிபாலாஜி, செல்வம், பாலா, செல்வராஜ், மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story