திமுக மகளிரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

திமுக மகளிரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

திமுக மகளிரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில்நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் விதத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.

கீழ்க்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை அந்தந்த பகுதியிலுள்ள மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன்.

Tags

Next Story