பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்

பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்

பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்

உத்திரமேரூர் சாலையோர பகுதிகளில், மின் விளக்குகள் அணையா விளக்காக ஒளிர்ந்து வருகிறது.மின் சிக்கனம் செய்ய கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், சாலையோரங்களில் மின் கம்பங்கள் அமைத்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பெரும்பாலும் இரவு, பகல் பாராது தொடர்ந்து ஒளிர்ந்து வருகின்றன. இதனால், மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் பலரும் புகார் கூறி வருகின்றனர். எனவே, உத்திரமேரூர்சாலையோர பகுதிகளில், மின் விளக்குகள் அணையா விளக்காக ஒளிர்ந்து வருவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் சிக்கனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story